1. உங்களின் வளர்ப்பு மற்றும் அவர்களுடன் அனுகும் முறையை மாற்றிக் கொள்ளுங்கள்.
2. அவர்களுடைய நண்பர்களுடன் பழகுவதை தடுப்பதற்கு பதிலாக, அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால், அதை அவர்களுக்கு விளக்கி புரிய வையுங்கள்.
3. அவர்களுக்கு செவிகொடுப்பதின் மூலம், அவர்கள் சந்தோஷத்தில் நீங்கள் பங்கு பெறலாம். மகள் சோகமாக இருந்தால், மூலகாரணத்தை கண்டுபிடிப்பதற்கு உதவி செய்யலாம்.
4. மகளின் கம்புயூட்டரை அவள் அறையில் வைப்பதற்கு பதிலாக, பொதுவான () அறையில் வைக்கலாம். இது அவளின் செயல்களை அறிய உதவும்.
5. இன்டர்நெட்(Internet), பிரைவுசிங் (Browsing), சாட்டிங்க் (Chatting), பேஸ்புக், ( Facebook) ஆர்குட் (Orkut) போன்றவற்றின் அடிப்படை செயலாக்கத்தை அறிந்து கொள்வது பெற்றோர்களுக்கு மிக அவசியம்.
6. உங்கள் மகளின் நடவடிக்கை கவலைகொள்ளும் விதத்தில் இருந்தால், அவளுடன் பேசுவதை, தொடர்பில் இருப்பதை நிறுத்திக் கொள்ளாதீர்.
7. அவள் ஆண் நண்பர்களுடன் பழகுவதற்கு முன், அவளுடன் உட்கார்ந்து பழகுவதின் எல்லையை பற்றி பேசி விடுங்கள்.
8. உங்களின் தனிப்பட்ட பக்தியை மகள் மீது திணிக்காதீர்கள். அது அவர்களை தவறான பாதையில் செல்ல உதவி செய்துவிடும்.
9. குடும்ப சம்பந்தமான ஆலோசனைகளில் ( விவாதங்களில் ) உங்கள் மகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
10. உங்கள் குழந்தைகள் முன் ஒருபோதும் சண்டை போடாதீர்கள்.