சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எருசலேம் என்னும் பட்டணத்தில் பெதஸ்தா எனப்பட்ட குளம் இருந்தது. அந்தக் குளத்தின் கரையில் ஜந்து மண்டபங்கள் கட்டப்பட்டிருந்தன. அவைகளில் குருடர், சப்பாணிகள், சூம்பின உருப்புடையவர்கள் முதலான வியாதிகாரர்கள் அநேகர் படுத்திருந்து தங்கள் சுகத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.
முப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த மனிதன் அங்கே படுத்துக் கொண்டிருந்தான். இந்த மனிதனுடைய நிலைமை மிகவும் பரிதாபமாய் இருந்தது. இந்த மனிதனைக் குறித்து ஆராயும்போது, முதலாவது இவன் நெடுநாட்கள் வியாதியுள்ளவனாய் இருந்தான். ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, முப்பத்தெட்டு வருடங்கள் படுக்கையில் கிடந்த உறுப்புகள் செயலற்று போயிருந்தன.
...மேலும்